SrilankanTourism

Sunday, June 25, 2017

தென்னாசியா நோக்கிய ஓர் பார்வை.

தென்னாசியப் பகுதியில் காணப்படும் எட்டு நாடுகளை உள்ளடக்கிய ஓர் அமைப்பே சார்க் அமைப்பாகும்.இந்திய கவசத் தகடு,இந்தோ -அவுஸ்ரேலியத் தகடு,ஐரோ -ஆசியத் தகடு ஆகியவற்றுக்குள் உள்ளடங்கும் 4000 k.m கிழக்கு மேற்காகவும், 3200 k.m வடக்கு தெற்காகவும் காணப்படும் 1656401 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பபை கொண்ட பிரதேசமே தென்னாசியா ஆகும். 19 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய துணைக்கண்டத்தினுள் உள்ளடங்கி இருந்த இப் பிரதேசத்திற்குள் பிரித்தானிய ஆதிக்கத்தின் பின்னர் சுதந்திர நாடுகளான பங்களாதேஷ்,பாகிஸ்தான், மலைதீவு ஆகியன பரிணமித்தன. இலங்கை, மாலைதீவு ஆகிய நாடுகள் தரை ரீதியாக தொடர்பற்ற வகையில் தனித் தீவுகளாக காணப்படுகின்றன.

Saturday, June 24, 2017

தொல்லியற் சுற்றுலா சார் உலக நிறுவனங்கள்.

சுற்றுலா என்ற சொல் கிப்ரு ( kipru) மொழியில் Torah எனும் சொல்லில் இருந்து தோன்றியதாக கூறுகின்றனர். Tornus என்றால் சக்கரம் ஆகும்.எனவே இச் சொல் சுற்றி வருதலைக் குறிக்கின்றது.இவ்வாறு லத்தீன் மொழியில் இருந்து பிறந்த tour என்ற சொல் கி.பி 1292  இல் ஆங்கில மொழியில் கலந்து tourism என்ற பெயரைப் பெற்றது.பின்னர் 20 நூற்றாண்டின் தொடக்க காலத்தில் பன்னாட்டளவில் சுற்றுலா வளர்ச்சி பெற ஆரம்பித்தது.இன்றைய காலத்தில் சுற்றுலாத்துறை முழுமையாக அரச அனுசரனையுடன் இடம்பெற்று வருகிறது.இச் சுற்றுலாத்துறை பல வகைகளில் காணப்படுகின்றது. அவையாவன :

Thursday, June 22, 2017

உலக மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றான சிங்கக் குகை சிகிரியா.

இலங்கையின் மத்திய பகுதியில் கண்டி எனும் நகருக்கு 72 km வட கிழக்கே மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ளது.கி.பி 5 ம் நூற்றாண்டில் காசியப்பன் எனும் மன்னன் (கி.பி 473-491) இக் குன்றின் மீது மிகப் பெரிய அரண்மனையை கட்டி இதனை தன் தலைநகராகக் கொண்டான்.கி.மு காலத்தில் இருந்தே இக் குன்று முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது.

இலங்கையில் உள்ள சுற்றுலா சார் நிறுவனங்கள்.

இன்று உலகலாவிய ரீதியில் வளர்ந்து வரும் ஒரு துறையாக சுற்றுலாத் துறை காணப்படுகின்றது.அதிக நாடுகளில் சுற்றலாத் துறை மூலமே வருமானம் கிடைக்கின்றது.
குறைந்த அளவிலான மூலதனத்துடன் சுற்றுலாப் பயணிகளை கவர்வதன் மூலம் நாட்டின் வருமானத்தை வளர்த்துக் கொள்ள முடிகின்றது.

Wednesday, June 21, 2017

வட இலங்கையின் சுற்றுலாவினை மேம்படுத்தும் யாழ்ப்பாணக் கோட்டை

யாழ்ப்பாணத்தில் 429 ஆண்டுகள் ஐரோப்பியரது ஆதிக்கம் நிலவியதன் அடையாளமாக காணப்படும் நினைவுச் சின்னங்களுள் யாழ்ப்பாணக் கோட்டைக்குத் தனித்துவமான வரலாறு உண்டு.யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்கு தெற்கேயுள்ள கடல் நீரேரியுடன் தொடர்பு பட்ட இக் கோட்டை இலங்கையில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய கோட்டையாக காணப்படுகின்றது.